• Download mobile app
09 Nov 2025, SundayEdition - 3560
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி

July 11, 2020 தண்டோரா குழு

கோவையில் பெரும்பாலான இடங்களில் மதியம் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பரவலாக 2 நாட்கள் மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கோவையில் இன்று மதியம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 1 மணியளவில் கனமழை மற்றும் சாரல் மழையாக மாறி மாறி பெய்தது.

கோவையில் துடியலூர், கவுண்டம்பாளையம், ஜி.என்.மில்ஸ், நரசிம்மநாயக்கன்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், வீரபாண்டி, பன்னிமடை, தடாகம், உள்ளிட்ட பகுதிகளில் மதிய நேரம் பெய்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இந்த மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க