April 18, 2019
தண்டோரா குழு
கோவை சுற்றுவட்டாரபகுதிகளில் மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தமிழகத்தில் கோடை வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அந்த அளவிற்கு வெயில் வாட்டி வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தி்ன் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோவை சுற்றுவட்டார பகுதிகளான காந்திபுரம், உப்பிலிபாளையம், உக்கடம், வடகோவை பூ மார்க்கெட் சாய்பாபா காலனி, சுந்தாரபுரம்,வடவள்ளி மற்றும் பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.