• Download mobile app
16 Aug 2025, SaturdayEdition - 3475
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் குளங்கள் நிரம்பியுள்ளன

November 3, 2021 தண்டோரா குழு

கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 25 குளங்கள் உள்ளன. அதில், 22 குளங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, குனியமுத்துார் செங்குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், வெள்ளலுார் குளம், சிங்காநல்லுார் குளம், ஒட்டர்பாளையம் குளம், கண்ணம்பாளையம் குளம்,இருகூர் குளம், சூலுார் பெரிய குளம், சூலுார் சின்ன குளம், செம்மாண்டம்பாளையம் குளம்.பேரூர் பெரிய குளத்தில், 95 சதவீதமும், நீலாம்பூர் குளத்தில், 80 சதவீதம், குனியமுத்துார் சின்ன குளத்தில், 20 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதனால், குனியமுத்துார் சின்ன குளத்தில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க