• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி

September 22, 2020 தண்டோரா குழு

கோவையில் பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற இளைஞர்களுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினா.இவர் அங்குள்ள விளையாட்டு மாரியம்மன் கோவில் அருகே உள்ள மளிகை கடையில் இன்று பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.அப்போது இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்த நிலையில்,ஒருவர் மட்டும் வாகனத்தில் இருந்து இறங்கி ரத்தினம் கழுத்தில் இருந்த செயினை பறித்து விட்டு தப்பி ஒட முயன்றுள்ளார்.அப்போது அந்த பெண் இளைரை தள்ளி விட்டு சப்தம் எழுப்பவே, அருகில் இருந்த பொது மக்கள் இரு இளைஞர்களையும் பிடித்து அருகில் இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.

பின்னர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில் அவர்கள் இருவரும் போத்தனூர் பகுதியை சேர்ந்த அப்துல் ரகூப்,ரத்துல் என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க