September 16, 2019 தண்டோரா குழு
கோவையில் புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தியும் மாநகராட்சி ஆணையாளரிடம் ஜமாத்தினர் மனு அளித்தனர்.
கோவை 86 வது வார்டுக்கு உட்பட்ட அல்-அமீன் காலனி பிலால் நகர், பொன்விழா நகர், புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் தார் சாலையை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி ஜமாத்தார்கள் கூட்டமைப்பின் சார்பாக இன்று மனு அளித்தனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜமாத்தினர் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பகுதிகளுக்கும் தார்சாலை போடப்படும் என்றும் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படும் என்றும் மாநகராட்சி ஆணையாளர் வாக்குறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லையென்றால் மக்களைத் திரட்டி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.