• Download mobile app
22 Jun 2026, MondayEdition - 3785
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் – ராமர் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

December 31, 2018 தண்டோரா குழு

கோவையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு ராமர் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் அளவிற்கு, தமிழ் புத்தாண்டை வரவேற்பதில்லை. மேலும் ஆங்கிலேய கலாச்சாரம் நம் தமிழ்நாட்டில் அதிக அளவில் பரவி வருகிறது. இதன் பாதிப்பாக, நள்ளிரவில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கின்றன, மேலும் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தல், பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ளுதல், போன்ற கலாச்சார சீரழிவுகள் மிகவும் அதிகமாக வருடாவருடம் நடந்துகொண்டு வருகிறது. இதை முற்றிலும் தடுக்கும் விதமாக ராமர் சேனா அமைப்பின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் நிறுவன தலைவர் ஆறுமுகம் கோவை மாவட்ட தலைவர் பிரபாகரன்
கோவை மண்டல தலைவர் மகேந்திரன் ராம சேனா அமைப்பின் தொண்டர்கள் குழுவாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிறுவன தலைவர் ஆறுமுகம் கூறுகையில்,

புத்தாண்டை கொண்டாடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் புத்தாண்டு பிறக்கும் அன்று இரவு பொதுமக்களுக்கு மிகவும் இன்னல்களை ஒரு சிலர், ஏற்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக மதுபாட்டில்களை சாலையில் உடைத்தல், இரவு நேரங்களில் பயங்கரமாக வாகனங்களை இயக்கி, விபத்துக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம் எங்களின் கோரிக்கை மனுவை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் சிறப்பான முறையில் செயல்படுவார் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.

மேலும் படிக்க