November 5, 2019 தண்டோரா குழு
புதிய தனியார் நிறுவன தொழிலாளர்களுக்கு குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டம் கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது.
கோவை அவினாசி சாலையில் உள்ள இந்திய வர்த்தக சபை அலுவலகத்தில் புதிய தொழிலாளர்களுக்கு இந்திய வர்த்தக தொழிற்சங்கம் சபையின் தலைவர்கள் தலைமையில் தொழிலாளர்களுக்கான ஒருநாள் குறைதீர்க்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்திய வர்த்தக தொழில் சங்கம் சபையின் தலைவர் லட்சுமி நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தொழிலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது இதில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைத்து சட்ட விதிகளையும் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.மேலும் லேபர் ஆக்ட், பேக்கிங் ஆக்ட் ,எம்ஆர்பி போன்ற பல்வேறு துறை சார்ந்த விதிமுறைகளை பற்றிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.