January 23, 2018
தண்டோரா குழு
கோவையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
கோவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியும் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற துவக்க விழாவில் நிறுவன தலைவர் ராஜலட்சுமி ஜெகதீசன் தலைமையில், கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் கணபதி விழா மடலை வெளியிட்டு பேசினார்.
இயற்கை அறிவியல் நிறுவனம் இயற்கை,விவசாயம்,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். மேலும், பல்வேறு இயற்கையை பாதுகாப்பது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.பின்னர் இது குறித்து பேசிய துணை வேந்தர் கணபதி இது போன்ற முயற்சிகளை தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.