• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த இலங்கை தாதா விசாரணையில் அம்பலம்

August 7, 2020 தண்டோரா குழு

பிரபல நிழல் உலக தாதா அங்கொடா லொக்கா கடந்த ஜூலை 3ம் தேதி கோவையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரம் போலி ஆவணம் தயாரிப்பு தொடர்பாக கோவை சிபிசிஐடி போலீசார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.அங்கொட லொக்கா மரணம் தொடர்பாக ஒரு வழக்கும்,போலி ஆதார் அட்டை மூலம் இந்திய குடியுரிமை இருப்பது போல் ஆவணங்கள் தயாரித்தது என இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர் கோவையில் முகாமிட்டு போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரித்து வருகின்றார்.

இந்நிலையில், விசாரணையில் அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிப்ரவரி 19 தேதி ப்ளாஸ்டிக்_சர்ஜரி செய்து கொண்டது அம்பலமாகியுள்ளது.சிறிய அளவிலான மூக்கை, சற்று பெரிதாக்கி உள்ளார் என்பது கூறப்படுகிறது.

மேலும் படிக்க