• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரியாணி ஜிஹாத்? 9 பேர் மீது வழக்குப்பதிவு

May 22, 2023 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பதிவுகள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பிரியாணி ஜிஹாத் என்ற பெயரில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும்,முஸ்லிம்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும்,அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பொய்யான பதிவுகள் வெளியாகின.

இதை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து இந்த பதிவுகளை வெளியிட்ட 9 பேர் மீது சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அருண்,9 டிவிட்டர் பதிவர்கள் மீது 4 சட்ட பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தார்.

தொடர்ந்து இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.இவ்வாறு சமூகவலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க