• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரியாணி ஜிஹாத்? 9 பேர் மீது வழக்குப்பதிவு

May 22, 2023 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் சர்ச்சை பதிவுகள் குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பிரியாணி ஜிஹாத் என்ற பெயரில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு பிரியாணி விற்பனை செய்வதாகவும்,முஸ்லிம்களுக்கு மட்டும் கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை செய்வதாகவும்,அதை போலீஸ் கண்டறிந்து உள்ளதாகவும் அவதூறு பரப்பும் வகையில் டிவிட்டரில் பொய்யான பதிவுகள் வெளியாகின.

இதை சைபர் கிரைம் போலீஸார் கண்காணித்து இந்த பதிவுகளை வெளியிட்ட 9 பேர் மீது சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் புகார் அளித்தார். அதன்படி இன்ஸ்பெக்டர் அருண்,9 டிவிட்டர் பதிவர்கள் மீது 4 சட்ட பிரிவுகளில் நேற்று வழக்கு பதிவு செய்தார்.

தொடர்ந்து இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.இவ்வாறு சமூகவலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

மேலும் படிக்க