• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

June 17, 2020 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த பிரபல ரவுடி செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர், மணியகாரன்பாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் தனசேகரன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்மந்தமாக கோவை சரவணம்ப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். மேலும் புலன் விசாரணையில் செந்தில் மீது கோவை மாவட்டம் மற்றும் மாநகர காவல்நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது .

எனவே குற்றவாளியை வெளியே விடும் பட்சத்தில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக கருதி காவல் ஆய்வாளர் செல்வராஜ், ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தார் . இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க