• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

June 17, 2020 தண்டோரா குழு

கோவையைச் சேர்ந்த பிரபல ரவுடி செந்திலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கோவை சின்னவேடம்பட்டி அஞ்சுகம் நகரைச் சேர்ந்த ரவுடி செந்தில் என்பவர், மணியகாரன்பாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் தனசேகரன் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது சம்மந்தமாக கோவை சரவணம்ப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்தனர். மேலும் புலன் விசாரணையில் செந்தில் மீது கோவை மாவட்டம் மற்றும் மாநகர காவல்நிலையங்களில் 4 கொலை வழக்குகள், 2 கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது .

எனவே குற்றவாளியை வெளியே விடும் பட்சத்தில் கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைய வாய்ப்பு இருப்பதாக கருதி காவல் ஆய்வாளர் செல்வராஜ், ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை மாநகர ஆணையருக்கு பரிந்துரை செய்தார் . இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவுப்படி ரவுடி செந்தில் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்க