April 4, 2019 தண்டோரா குழு
புதிய அறிவிப்புகளுடன் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பங்குபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் இருக்கும் இதில் 5 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் வரும் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கூட்டணி கட்சிகள் பங்குபெறும் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக கால்கோள் நடும் விழா நடந்தது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார், கோட்டபொருப்பாளர், GKS செல்வகுமார், அதிமுக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், மற்றும் கூட்டனி கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும், கலந்து கொண்டார்கள்.
முன்னதாக கொடிசியா வளாகத்தில் வெடிகுண்டு நிபுனர்கள் சோதனை மேற்கொண்டார்கள்.