• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய மக்கள் நீதி மய்ய வேட்பாளர்

April 1, 2019 தண்டோரா குழு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கோவை தொகுதிக்கான மக்கள் நீதி மய்யக் கட்சியின் வேட்பாளர் மகேந்திரன், தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 18-ம் தேதி நடக்கிறது. தேர்தல் தேதி நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். கோவை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மகேந்திரன் போட்டியிடுகிறார். இதையடுத்து, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்ப்பட்ட பகுதிகளில் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், மகேந்திரன் இன்று கோவை ரேஸ்கோர்ஸ், துடியலூர் என அடுத்தடுத்து பல்வேறு முக்கிய பகுதியில் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காலை துடியலூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், துடியலூரில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.மேலும், துடியலூர் சந்தையில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

அதைபோல், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி, மாற்றத்தை உருவாக்க வாய்ப்பு தாருங்கள் எனக் கேட்டுக் கொண்டனர். கோவை வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கோவையில் வரும் 5-ம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க