June 15, 2021
தண்டோரா குழு
கோவையில் கொரானா இரண்டாவது அலை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முறையான வழிகாட்டுதல்களையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.அதன்படி ஆக்ஸிஜன் சர்வீஸ்களையும் கோவை மாநகரம் முழுவதும் 7 இடங்களில் பேரிடர் மையத்தை தொடங்கி பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில்,இன்று கோவை உக்கடம் கோட்டைமேட்டில் பாப்புலர் ஃப்ரண்ட் கொரானா ரீலிஃப் சென்டரில் வைத்து நடமாடும் இருசக்கர வாகன ஆக்சிஜன் சேவை துவங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கோவை மாவட்ட தலைவர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் தலைமை தாங்கினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் A.S.இஸ்மாயில் கொடியசைத்து துவங்கி வைத்தார். மாவட்ட செயலாளர்கள் A.அப்துல் ரஹ்மான், K.முஜீபுர் ரஹ்மான் , N. உபைது ரஹ்மான் மற்றும் டிவிஷன் தலைவர்கள், டிவிஷன் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கோவையில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்புதான் முதன் முதலில் கொரானா ரீலிஃப் சென்டரினை அமைத்து பணிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.