• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ்

December 19, 2020 தண்டோரா குழு

கோவையில் பவுண்டரி தொழிற்கூடங்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை குறு மற்றும் சிறு பவுண்டரி அதிபர்கள் சங்கம் தலைவர் சிவசண்முக குமார் கூறியதாவது:

மூலப்பொருட்களின் விலை 30 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.இந்த விலை ஏற்றத்தால் பவுண்டரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம்.

இதனிடையே வரும் 21ம் தேதி முதல் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை
தற்காலிகமாக விலக்கிக்கொள்வது என்று சங்க நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக முடிவெடுத்துள்ளோம்.இந்த வேலைநிறுத்தம் காரணமாக பவுண்டரித்தொழிலை சார்ந்துள்ள வெட்கிரைண்டர், பம்பு மற்றும் மோட்டார் போன்ற தொழில்கள் முடங்கும் நிலை ஏற்பட்டது.

பவுண்டரித்தொழிலின் வாடிக்கையாளர்கள் மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை புரிந்து கொண்டுள்ளனர்.இது போன்ற காரணங்கனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற முடிவு செய்தோம்.

இவ்வாறு சிவசண்முக குமார் கூறினார்.

மேலும் படிக்க