February 20, 2019
தண்டோரா குழு
கோவையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கென பஞ்ச சித்ரா ஓவிய பயிற்சி பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.
பொதுவாக ஒவியம் என்பது மக்களிடையே கவரும் வண்ணமாக அமைந்து வருகிறது. இதை தொடர்ந்து இந்தியாவில் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சித்திரங்கள்,வடிவங்களான ஓவியங்கள் அழிந்து வரும் நிலையில் இதனை மீட்டெடுக்கும் வகையில் கோவை சாயிபாபா காலனி பகுதியில் புதியதாக பஞ்ச சித்ரா எனும் ஓவிய பயிற்சிப்பள்ளியானது இன்று துவங்கப்பட்டது.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் இந்த ஓவிய கலையினை கற்றுக்கொண்டு பாரம்பரியத்தை கடைபிடிக்க வேண்டுமென்றும் நடைமுறையில் கொண்டு வரவேண்டுமெண்டும் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் பயன் படுத்தி கொண்டு தங்களது திறமைகளை ஒவியத்தின் மூலம் ஆஸ்கார் விருதை அடையக் கூடிய ஒரு வாய்ப்பாக இருக்கும் என்றனர். இந்த துவக்க விழாவில் டெல்லியில் உள்ள லலித் அகடாமியின் முன்னாள் தலைவர் பாஸ்கரன் ,மற்றும் கோவை போக்குவரத்து துணை ஆணையாளர் சுஜித்குமார், வராகி சுவாமிகள், பஞ்ச சித்ரா அகடாமி நிறுவனர் பருதி ஞானம் , மற்றும் ஓவிய பள்ளி மாணவ மாணவியர் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.