• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பள்ளி மாணவியை திருமண ஆசை காட்டி பலாத்காரம் -டிரைவர் கைது

January 17, 2022 தண்டோரா குழு

கோவையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை வடவள்ளியை அடுத்த காளப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சுதாகரன் (21). சோமையம்பாளையம் பஞ்சாயத்தில் டிரைவராக பணி புரிந்து வருகிறார்.இவர் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று அவ்வப்போது பொருட்களை ஏற்றி வருவார்.அப்போது அந்த பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இதனிடையே அந்த சிறுமிக்கு திருமண ஆசை காட்டிய சுதாகரன் அவரை பலாத்காரம் செய்துள்ளார்.இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, சிறுமியின் பெற்றோர் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில், சுதாகரன் மீது சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டத்தின் (போக்சோ) கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க