• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி

June 15, 2019 தண்டோரா குழு

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைக்க நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. ஊர் பொதுமக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் உயர் மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து உயர் மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு உள்ள உயர் மின் கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

இதையடுத்து, நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று தற்போது நில அளவீடு செய்யும் பணிகள் செம்மாண்டம் பாளையம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் இருந்தபோதும் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை கலைந்து செல்ல மறுத்து எங்களுக்கு ஒரு நீதி கிடைத்த பின் போராட்டத்தை கைவிடுவதாக என்று தெரிவித்தனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க