• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பரவலாக பெய்து வரும் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

April 22, 2019 தண்டோரா குழு

கோவையில் மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் மாலை நேரங்களில் நகரில் குளிர்ச்சி நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழக்கத்துக்கு மாறான வகையில் வரலாறு காணாத அளவுக்கு கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் அதிகபட்சமாக 100 முதல் 103 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவியது. அதிக வெப்பம் காரணமாக அனல்காற்று வீசியதையடுத்து பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர்.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவையின் மாங்கரை , ஆட்சியர் அலுவலகம், குனுயமுத்தூர், உக்கடம் , வடவள்ளி, காந்திபுரம், இடையர்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் நீடித்த வரும் மழையால் நகரில் குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து பெய்து வரும் கோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்க