• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான துணை பொதுத்தேர்வு

September 21, 2020 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வரும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு துணைத் பொது தேர்வில்,கோவை மாவட்டத்தில் 1055 மாணவர்கள் எழுதுகின்றனர்.

மார்ச் மாதம் முடிந்த 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதே கரோனாவால் நடைபெறாத 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் ஆல் பாஸ் போடப்பட்டது. இந்நிலையில் தனி தேர்வாளர்களுக்கான துணை பொதுத்தேர்வு குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன் படி இன்று துவங்கும் துணைப் பொதுத்தேர்வுகள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று துவங்கிய 10 ஆம் வகுப்பு துணைத்தேர்வை கோவை மாவட்டத்தில் புது பாடத்திட்டத்தில் 9 மையங்களில் 256 பேரும், பழைய பாடத்திட்டத்தில் 7 மையங்களில் 799 பேரும் எழுதுகின்றனர்.

தேர்வுக்கு வரும் மாணவர்கள் கட்டாய முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களிடையே கூடுதல் இடைவெளி விடப்பட்டுள்ளது. தேர்வுகளை கண்காணிக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க