• Download mobile app
06 Jun 2026, SaturdayEdition - 3769
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் சோதனை

March 4, 2021 தண்டோரா குழு

கோவையில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் பூ மார்க்கெட் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் வாகனங்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பினை கடந்த மாதம் 26-ம்தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.இதன்படி கோவையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையிலும், தேர்தல் நன்னடத்தை விதிகளை கண்காணித்திடும் வகையிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வாக்காளர்களுக்கு வழங்க வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றதா என பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக பூ மார்க்கெட் சிரியன் சர்ச் ரோடு பகுதியில் இருந்து வடகோவை செல்லும் சாலையில் இன்று, வாகனங்களை தடுத்து நிறுத்திய பறக்கும் படை அதிகாரி சுப்புலட்சுமி வாக்காளர்களுக்கு வழங்க பணம், பரிசுப் பொருட்கள் ஏதேனும் எடுத்துச் செல்ல படுகிறதா என சோதனை மேற்கொண்டனர்.

மேலும் படிக்க