• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலியானவர்களுக்கு நினைவாஞ்சலி

November 8, 2017 தண்டோரா குழு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலியானவர்களுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கோவையில் நினைவாஞ்சலி நடத்தப்பட்டது.

கடந்த நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஆனால், இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியிலும் வரிசையில் நின்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மோடியின் இந்த பணமதிப்பிழப்பு கண்டிக்கும் விதமாக வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி நவம்பர் 8ம் தேதியை பொருளாதார அடக்குமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைமை அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முஜீப் ரஹ்மான் தலைமையில் பணமதிப்பிழப்பு உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், திருவோடு ஏந்தியும் மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க