• Download mobile app
06 Feb 2026, FridayEdition - 3649
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலியானவர்களுக்கு நினைவாஞ்சலி

November 8, 2017 தண்டோரா குழு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலியானவர்களுக்கு வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கோவையில் நினைவாஞ்சலி நடத்தப்பட்டது.

கடந்த நவம்பர் 8ம் தேதி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். ஆனால், இந்த திடீர் நடவடிக்கையால் அதிர்ச்சியிலும் வரிசையில் நின்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மோடியின் இந்த பணமதிப்பிழப்பு கண்டிக்கும் விதமாக வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி நவம்பர் 8ம் தேதியை பொருளாதார அடக்குமுறை தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி தலைமை அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் முஜீப் ரஹ்மான் தலைமையில் பணமதிப்பிழப்பு உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், திருவோடு ஏந்தியும் மோடி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க