கோவை செல்வபுரம் பகுதியில் பட்டப்பகலில் முன்விரோதம் காரணமாக இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஆட்டோ டிரைவர் ஆனந்தன் மற்றும் அவரது நண்பர் செல்வம் என்பவரை மர்ம நபர்கள் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைகாக மருத்துமனை கொண்டு வரும் வழியில் செல்வமும் உயிரிழந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் படுகொலை செய்யப்படதற்கு பலி வாங்கும் விதமாக தற்போது சிறையில் இருந்த வெளியில் வந்தவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்த செல்வபுரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா,பாபுஜி,மோகன்,சூர்யா ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பட்டப்பகலில் மக்கள் அதிகம் வசிக்க கூடிய செல்வபுரம் பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு