• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நூறாண்டுகளுக்கு மேல் மக்களின் மனக்கவலை போக்கிய ஆலயத்தை அகற்ற மக்கள் எதிர்ப்பு

July 31, 2019 தண்டோரா குழு

கோவையில் நூறாண்டுகளுக்கு மேல் மக்களின் மனக்கவலை போக்கிய ஆலயத்தை அகற்ற வேண்டுமென அரசு அதிகாரிகள் துடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இந்நடவடிக்கையை நிறுத்த வேண்டும் என கண்ணீர் மல்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை கணபதி ஆவாரம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது கரிவரதராஜ பெருமாள் திருக்கோவில். மைசூரை ஆண்ட மூன்றாம் கிருஷ்ணராஜ தேவராயரால் 1876 ஆம் ஆண்டு இக்கோவில் நிறுவப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் கோவில் அமைந்திருக்கிற பகுதியை ஒட்டி பாலம் அமைக்கப்படவுள்ளதால் கோவிலை அகற்ற வேண்டும் என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் கரிவரதராஜ பெருமாள் கோயிலை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக அங்கிருக்கும் இக்கோவிலை அகற்ற எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலம் அமைக்கவும் அரசாங்க நடவடிக்கைக்கும் தாங்கள் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை எனக்கூறும் இக்கோவிலை நிர்வகித்து வரும் குடும்பத்தினர், பாரம்பரியமான இக்கோவிலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் போதும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோவிலில் அமைக்கப்பட்டிருக்கும் சிலைகள் மிகப்பெரிய தொன்மை வாய்ந்தது எனக்கூறும் அவர்கள் இதனை உணர்ந்து அரசு அதிகாரிகளும் நெடுஞ்சாலைத் துறையினரும் செயல்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். மேலும் இக்கோவிலை மேம்படுத்த அறநிலைத்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க