• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீராபானம் இறக்க நிதியுதவி அளிக்க முதல்வரிடம் விவசாயிகள் கோரிக்கை

March 26, 2018 தண்டோரா குழு

நீராபானம் உற்பத்தி செய்வதற்கு தேவையான பொருட்களை பெற நிதியுதவி தேவை என கோவை விவசாயிகள் முதல்வரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர்.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், புதியதாக அமைக்கப்பட்ட பூச்சி அருங்காட்சியகத்தை திறந்து வைக்க வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சந்தித்து மனு கொடுத்தனர்.அதில் நீராபானம் இறக்குவதற்கு தேவையான நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், நீராபானத்தை இறக்க பொருட்கள் பல வாங்க உள்ளதாகவும் எனவே உடனடியாக நிதியுதவி அளித்தால் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என வலியுறுத்தி இருந்தனர்.

மேலும்,நீராபானம் இறக்கும் கூட்டுறவு சங்கத்திற்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி தேவைப்படுவதாகவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.இந்த விவகாரத்தில்,விரைவில் விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும் என வேளாண் முதன்மை செயலரிடம் தமிழக முதல்வர் கூறினார்.

மேலும் படிக்க