• Download mobile app
13 Nov 2025, ThursdayEdition - 3564
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி

December 22, 2021 தண்டோரா குழு

கோவையில் விபத்து வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாததால் 4 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.

கோவை வடவள்ளியை சேர்ந்தவர் குருபிரசாத், தனது நண்பர் இருசக்கர வாகனத்தை சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், குருபிரசாத்தின் வலது கால் முட்டிக்கு கீழ்பகுதி துண்டிக்கப்பட்டது. விபத்தால் ஏற்பட்ட வருவாய் இழப்பு, எதிர்கால வாழ்க்கை பாதிப்புக்கு இழப்பீடாக ரூபாய் 30 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் குருபிரசாத் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விபத்தால் வலது கால் முட்டிக்கு கீழ் பகுதி அகற்றப்பட்டுள்ளதால்,விபத்துக்கு முன்பிருந்ததைப்போல அவரால் நின்று பணியாற்ற முடியாது என்றும், மருத்துவ வாரியம் அளித்த சான்றில் 80 சதவீதம் நிரந்த ஊனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதன் அடிப்படையில், அவருக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு, வலி,வேதனை உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக ரூபாய் 30.99 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் அரசுப் போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதன்பிறகும், உரிய காலத்தில் இழப்பீடு வழங்கப்படாததால், நீதிமன்றத்தில் உத்தரவை நிறைவேற்றும் மனுவை குருபிரசாத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றம், அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில், 4 அரசுப்பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டன.பின், வழக்கின் உத்தரவுப்படி இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான உறுதி அளிக்கப்பட்டதால், ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்துகள் விடுவிக்கப்பட்டன.

மேலும் படிக்க