• Download mobile app
10 May 2025, SaturdayEdition - 3377
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

February 22, 2018 தண்டோரா குழு

கோவையில் சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக,தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இன்று(பிப் 22)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அனைத்து அமைப்புகளின் சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் அருகே  சமூக நீதிக்கான மாணவர் பேரவையின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக்கோரியும், சட்டப்பேரவையில் நீட் எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் தலைநகர் டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிரான கருத்தரங்கம் சமூக நீதிக்கான மாணவர் பேரமைப்பு சார்பாக நடத்த இருப்பதாகவும், அதனைத்தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடத்த இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க