• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நிவாரணம் வேண்டி எம்.ஜி.ஆர், கமல் வேடத்தில் வந்து மனு

May 28, 2020 தண்டோரா குழு

கோவையில் நிவாரண நிதியுதவி கோரி எம்.ஜி.ஆர்,கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா ஊரடங்கினால் பல்வேறு தரப்பினரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். இந்நிலையில் கோவையில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், சந்திரபாபு ஆகியோர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட நடன கலைஞர்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேடை நடன தொழிலை நம்பியுள்ள கலைஞர்களுக்கு பிப்ரவரி முதல் ஜீன் மாதம் வரையிலான சீசன் வருமானமே வாழ்வாதாரமாக இருந்து வந்ததாகவும், கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதாரம் முடங்கியுள்ளதாகவும் நடன கலைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். 2 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்க வேண்டுமெனவும், அரசு சார்பில் நடைபெறும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க