• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நாளை மெகா தடுப்பூசி முகாம் – 2 லட்சம் டோஸ் செலுத்த இலக்கு

December 17, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் 15-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. இதில் 2 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி, கோவையில் 18 வயத்திற்கு மேற்பட்ட 93.6 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 68 சதவீதம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்திற்குள் நூறு சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த செப்டம்பர் 12-ம் தேதி முதல் 14 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது. இந்த முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

கிராமப்புறங்களில் 601 மையங்கள், மாநகராட்சியில் 249 மையங்கள் என மொத்தம் 850 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 2 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது புதிய வகை கொரோனா நோய்த் தொற்று பரவுவதால் அனைவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளையும் செலுத்தி கொள்வது மிக அவசியம் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க