• Download mobile app
11 Feb 2026, WednesdayEdition - 3654
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நாயுடன் சண்டை போட்டவர் பலி

November 6, 2021 தண்டோரா குழு

கோவை புதூர் அருகே உள்ள ஆறுமுக கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (42). சிப்ஸ் கடை ஊழியர். இவர் தீபாவளியை முன்னிட்டு மது போதையில் பல இடங்களில் சுற்றிக் கொண்டிருந்தார்.‌

ஆறுமுகக் கவுண்டனூர் பகுதியில் தெரு நாய்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் கண்டித்தனர். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரத்தில் ரோட்டோரமாக ஆறுமுகம் இறந்துகிடந்தார். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க