• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நான்கு மாத போலீஸ் தேடலுக்கு பின் சிக்கிய கொள்ளையர்கள் கைது ! -30 சவரன் நகை பறிமுதல்

September 2, 2021 தண்டோரா குழு

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ சிறுவாணி ரோடு சாலையில் மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருபவர் ஆனந்தன். இவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ஆனந்தம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு திண்டுக்கல் சென்று விட்டு வீடு திரும்பினார். வீட்டின் கதவை திறந்து பார்த்த போது, சமையல் அறையின் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது.மேலும் படுக்கையறையில் இருந்த பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த்து.

இதுதொடர்பாக ஆனந்தன் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த வடவள்ளி போலீசார் 4மாத தேடுதல் வேட்டைக்கு பிறகு 3 குற்றவாளிகளை கைது செய்தனர். கைது செய்த குற்றவாளிகளிடம் இருந்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் படிக்க