• Download mobile app
03 May 2025, SaturdayEdition - 3370
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நவ 10ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர்

November 8, 2017 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது.

இந்த முறை நடைபெறும் இந்த வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சி வரும் நவ 10ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.இந்த நேர்காணல் நிகழ்ச்சியில் படிக்காதவர்கள் 1 முதல் 12 வகுப்பு வரை படித்தவர்கள், பட்டதாரிகள்,ஐடிஐ மற்றும் டிப்ளமோ தகுதியுடையவர்கள் கலந்துக் கொள்ளலாம்.மேலும்,டிரைவர்,பிட்டர்,டர்னர்,கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் போன்ற தொழிற்கல்வி பயின்றவர்களும் கலந்துக் கொண்டு பயன் பெறலாம்.

இந்நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலையளிப்போர் கலந்து கொண்டு தாங்கள் நிறுவனத்திற்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.இந்நிகழ்ச்சி முற்றிலும் இலவசமாக நடத்தப்படவுள்ளது.மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் வேலை பெறும் மனுதார்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யபடமாட்டது.இம்மனுதாரர்கள் தொடர்ந்து தங்களது வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை அரசு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க