• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டி ! – பதக்கங்களை வென்ற மாணவ மாணவிகள்

October 3, 2021 தண்டோரா குழு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மாநில அளவிலான அனைத்து வகையான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றது. ராஜா எம்.எம்.ஏ அகாடமி கிராண்ட் மாஸ்டர் ராஜா சார்பாக நடைபெற்ற இதில் திருப்பூர் ஈரோடு சென்னை தேனி நாமக்கல் கரூர் கோபி உள்ளிட்ட மாவட்டத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த தற்காப்பு கலை போட்டியில் முல்லை ஸ்போர்ட்ஸ் அகடாமி முதலாவது ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.

இரண்டாவதாக ஆன்ட்லீ பிளாக் பெல்ட் அகாடமியும், மூன்றாவதாக ஃபயர் டிராகன் ஸ்போர்ட்ஸ் அகாடமியும் பதங்ககங்களை தட்டி சென்றனர். போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானவேல் ராஜா, தங்கம் ஷாப்பிங் மால் சேர்மன் தங்கவேல், AMP மற்றும் காஃபி ரெடி நிர்வாக இயக்குனர் ராஜேஷ் ஆகியோர் பதக்கங்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் மாணவ மாணவியர், பெற்றோர் உட்பட அனைவரும் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க