• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழா

September 11, 2020 தண்டோரா குழு

கோவையில் நடைபெற்ற இமானுவேல் சேகரனார் குரு பூஜை விழாவில் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ்,பா.ஜ.க உட்பட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட களத்தில் வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர் தியாகி இம்மானுவேல் சேகரன். இவரது 63 ஆம் ஆண்டு குரு பூஜை விழா கோவையில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவை சார்பாக புலிய குளம் பகுதியில் நடைபெற்றது.பேரவையின் தலைவர் மனு நீதி சோழன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதில் அங்கு வைக்கப்பட்டிருந்த இம்மானுவேல் சேகரனார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், அ.தி.மு.க சார்பாக கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுனன் காங்கிரஸ் கட்சி சார்பாக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார்,பா.ஜ.க சார்பாக மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.இதில் அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரவையை சேர்ந்த சதீஷ்,பாபு, மகேஷ், ராஜேந்திரன், ஜெயகுமார், வினோத், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க