• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடிகர் சூர்யாவின் உருவ படத்தை கிழித்து ஆர்ப்பாட்டம்

September 20, 2020 தண்டோரா குழு

கோவையில் நடிகர் சூர்யாவை கண்டித்து இந்து இளைஞர் முன்னணி சார்பில் சூர்யா உருவ படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற்று டாக்டர் ஆவதற்கு தயாராக உள்ளதாகவும், ஆனால் மாணவர்களை தவறாக சித்தரித்து அவர்களிடம் தற்கொலையை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், எனவே நடிகர் சூர்யா, மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவரை கண்டித்தும் தமிழக முழுவதும் இந்து இளைஞர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதே போல் கோவை காந்திபார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சூர்யாவின் படத்தை கிழித்தும் காலில் மிதித்தும் சூர்யாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இதில் இந்து இளைஞர் முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சண்முகம் மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் நிர்வாக குழு உறுப்பினர் குணா கோட்ட செயலாளர் சதீஷ் உள்ளிட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க