• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் நடனகலை கூடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் – கொரொனா வேடத்தில் மனு

May 20, 2020 தண்டோரா குழு

கோவையில் நடனகலை கூடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி் நடன கலைஞர்கள் கொரொனா வேடம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்ட நடன கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தனர்.அப்போது கொரோனா மாதிரி வடிவமைப்பு உடையுடன் வந்திருந்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில்,

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக வருமானம் இன்றி முடங்கி உள்ளதாகவும் இதனை நம்பி உள்ள நடன கலைஞர்கள் வாழ்வாதாரம் பாதிக்கபட்டு உள்ளதாக தெரிவித்தனர். இந்த தொழில் நலிவடைந்து விடாமல் பாதுகாக்கும் நோக்கில் சேவ் & சப்போர்ட் டான்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற அமைப்பை துவங்கி உள்ளதாகவும் இதன் மூலமாக கடந்த இரு மாதங்களாக கிடைக்க பெற்ற உதவிகள் மூலம் இத்தொழிலை நம்பி வாழ்பவர்களுக்கு உதவியதாக கூறினர்.

மேலும், கோவை மாநகரில் 45 டான்ஸ் ஸ்டுடியோஸ் உள்ளதாகவும் அனைவரும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருவதால் இரு மாதங்களுக்கு வாடகையில் விலக்கு அளிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.இதே போல் இந்த தொழிலை நம்பி மேக்கப் செய்யும் 25 குடும்பங்கள் உள்ளதாகவும் கூடிய விரைவில் நடன நிகழ்ச்சிகள் நடத்த தங்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க