• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டம்

February 3, 2021 தண்டோரா குழு

தொழிலாளர் சட்டத்தொகுப்பு நகல் எரிப்பு போராட்டத்திற்கு கோவையில் திரண்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் கையான்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 4 தொழிலாளர் சட்ட தொகுப்பு நகல் எரிக்கும் போராட்டத்தில் மத்திய தொழிற்சங்கத்தினர் கோவையில் ஈடுபட்டனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும், மின்சார சட்டம் 2020 ஐ திரும்ப்பெற வலியுறுத்தியும், தனியார் மயமாக்கலை கண்டித்தும், நாடு முழுவதும் சட்ட நகல் எரிக்கும் போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்தது.

இதன்ஒருபகுதியாக கோவை காந்திபுரத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட திரண்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டம் துவங்கும்போதே ஆர்ப்பாட்டத்திற்குள் உள்ளே நுழைந்த காவல்துறையினர் தலைவர்கள் கையில் இருந்த சட்ட நகலை பறித்தனர்.இதனால் இலுதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து காவல்துறையினர் தனது முழு பலத்தையும் பயண்படுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தொழிற்சங்க தலைவர்களை தரதரவென இழுத்தும், குண்டுக்கட்டாக தூக்கியும் கைது செய்தனர். மேலும் திட்டமிட்டு பரபரப்பு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தோடு அப்பகுதியில் இலுந்த கடைகளை அடைக்கநிர்பந்தித்து அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஐஎன்டியூசி தலைவர் துளசிதாஸ், ஏஐடியுசி தலைவர் ஆறுமுகம், சி. தங்கவேல், எச்எம்எஸ் தலைவர் ராஜாமணி, சிஐடியூ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, மனோகரன், எல்பிஎப் மணி, வணங்காமுடி, எம்எல்எப் தியாகராஜன், எஸ்டிடியு ரகுபுநிஸ்தார் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க