July 15, 2021
தண்டோரா குழு
கோவை புறநகர் பகுதிகளில் தொடர் சாரல் மழை பெய்து வருவதால் கோவை குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில்,கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக,இரவு,பகலாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.இதனால்,மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக,மேற்கு மலை தொடர்ச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் அருகே உள்ள, கோவை குற்றால நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.தொடர்ந்து மழை பெய்யும் என்பதால்,நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.