• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது !

September 10, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு கொள்ளையர்கள் சிக்கினர்.

கடந்த சில மாதம் முன் ஜி எம் மில் பகுதியில் இரவு நேரத்தில் பூட்டி இருந்த ஒரு வீட்டின் கதவினை உடைத்து வீட்டிலிருந்து சுமார் 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கவுண்டம்பாளையம்,தடாகம் ஆகிய இடங்களிலும் இரவு நேரங்களில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடைபெற்று வந்தது.

இதுபோன்ற அனைத்து வழக்குகளிலும் குற்றவாளிகள் பற்றிய எவ்வித விபரங்கள் அறியாத நிலையில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையிலும் சம்பவம் இடங்களில் கிடைத்த பல்வேறு விடயங்கள் அடிப்படையிலும் , சிறையில் இருந்து வந்த கைதிகளின் விவரங்களை சேகரித்தும் விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் மற்றும் கரூர் மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் ஆகிய இருவர்க்கும் கோவை தொடர் கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரியவந்து.

அதனடிப்படையில் அந்த குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் இடையர்பாளையம் என்ற இடத்தில் நடைபெற்ற ஒரு வழிப்பறி வழக்கில் இரு குற்றவாளிகளையும் தனிப்படையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் கொள்ளையடித்தது ஒப்புக் கொண்டனர்.இவர்களுக்கு கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ளது. 2015 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடந்த 150 சவரன் வழிபறி கொள்ளையில் தொடர்பு உள்ளவன் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் விசாரணைக்கு பிறகு அவர்களிடமிருந்து 42 சவரன் நகைகள் மீட்கப்பட்டது.இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதி தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க