• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தொடர்ந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தும் கும்பல் போலீசார் திணறல்

July 19, 2019 தண்டோரா குழு

கோவை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான சந்தன மரங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கோவை ராம் நகர், சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சந்தன மரங்கள் தொடர்ந்து மர்ம நபர்களால் வெட்டப்பட்டு நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் சாய்பாபா காலனியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தும் போது போலீசார் அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடிக்க முற்பட்டபோது அவர்கள் ஓட்டி வந்த காரை பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் அந்த காரை அந்த காரில் கட்டப்பட்டிருந்த சந்தன மரக்கட்டைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கோவை நகரின் முக்கிய பகுதியான பந்தய சாலையில் உள்ள பிரபல நிறுவனத்தின் முன்பு உள்ள சந்தனமரம் மர்மநபர்களால் வெட்டி கடத்தப்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்த போதும் சந்தன மரக் கொள்ளையர்கள் மரத்தை வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மூன்று இடங்களில் மர்ம நபர்கள் சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சி செய்துள்ளனர் இதில் சாய்பாபா காலனி நடைபெற்ற கொலை சம்பவத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க