• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய அளவிலான களரி ஃபைட் சாம்பியன்ஷிப் 2023 போட்டி

January 9, 2023 தண்டோரா குழு

களரி ஃபைட் ஃபெடரேசன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான களரி ஃபைட் சாம்பியன்ஷிப் 2023 போட்டிகள் துவக்க விழா கோவை பீளமேடு பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி மையத்தில் நடைபெற்றது. இந்த போட்டிகளை கோவை ஆட்சியர் சமீரன் தொடங்கி வைத்தார்.

சப்- ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய பிரிவுகளில் கத்தி சண்டை, வாள் சண்டை, குத்து சண்டை ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய பகுதியிலிருந்து 175க்கும் மேற்பட்டோர் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

ஏழு வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.எந்த போட்டியில் 27 பெண்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் சி.வி.என் கைலாசம் களரி, ரமேஷ் ஆர்.நாயர் குருக்கள், பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி தலைவர் ருத்ரமூர்த்தி பிஎஸ்ஜி பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ்,களரி ஃபைட் ஃபெடரேசன் ஆப் இந்தியா பொருளாளர் சாஜி நிர்வாகி மேத்யூ, நகளரி கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பிஜி வர்கீஸ், இணை செயலாளர் சுரேஷ் குருக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க