• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தேசியக்கொடியை பாஜக கட்சி கம்பத்தில் ஏற்றியவர் மீது வழக்கு பதிவு

August 18, 2020 தண்டோரா குழு

கோவையில் தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 74 ஆவது இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், நகர அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் என பல தரப்பினரால் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி காவல் எல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் கடந்த ஆகஸ்ட்15ம் தேதி தேசிய கொடியேற்றப்பட்டது. ஆனால், பாஜக
கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சரவணம்பட்டி ஜனதா நகரில் வசிக்கும் இளையராஜா என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசியக்கொடியை பாஜக கட்சி கம்பத்தில் ஏற்றிய கணபதி மண்டல தலைவர் வெங்கடேஷ் மீது இன்று தேசியக் கொடி அவமதிப்பு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க