• Download mobile app
26 Mar 2026, ThursdayEdition - 3697
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசியக்கொடியை பாஜக கட்சி கம்பத்தில் ஏற்றியவர் மீது வழக்கு பதிவு

August 18, 2020 தண்டோரா குழு

கோவையில் தேசியக் கொடியை அவமதித்ததாக பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி 74 ஆவது இந்திய சுதந்திர தினம் நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையாளர், நகர அலுவலகங்கள், கிராமப்புற அலுவலகங்கள், அரசியல் கட்சிகளின் சார்பில் என பல தரப்பினரால் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக கோவை சரவணம்பட்டி காவல் எல்லையில் பாரதீய ஜனதா கட்சியினர் சார்பில் கடந்த ஆகஸ்ட்15ம் தேதி தேசிய கொடியேற்றப்பட்டது. ஆனால், பாஜக
கட்சி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றியதாக கூறப்படுகிறது.இதனையடுத்து சரவணம்பட்டி ஜனதா நகரில் வசிக்கும் இளையராஜா என்பவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், தேசியக்கொடியை பாஜக கட்சி கம்பத்தில் ஏற்றிய கணபதி மண்டல தலைவர் வெங்கடேஷ் மீது இன்று தேசியக் கொடி அவமதிப்பு வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க