• Download mobile app
12 Feb 2026, ThursdayEdition - 3655
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தெரு விளக்கு எரியவில்லை – ரூ.2250 அபராதம் விதிப்பு

December 2, 2021 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 59-வது வார்டில் கணபதி நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதுகுறித்த தகவலின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதில் கணபதி நகர் பகுதியில் தெருவிளக்குகள் 18 நாட்கள் எரியாமல் இருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தெருவிளக்கு பணிகளை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள கே.சி.பி. என்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு பழுதை சரிசெய்ய கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

மேலும் நாளொன்றுக்கு ரூ.25 வீதம் ரூ.2,250 அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க