• Download mobile app
19 Sep 2025, FridayEdition - 3509
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் துவங்கியது சிறப்பு கொரோனா காய்ச்சல் பரிசோதனை முகாம்

July 9, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சிறப்பு கொரோனா காய்ச்சல் பரிசோதனை முகாம் தொடங்கி உள்ளது. அதில் ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 20 லட்சம் பேர் இங்கு வசித்து வரும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது வரை 927 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 308 பேர் குணம் அடைந்து உள்ளன. 3 பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் 100 வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா காய்ச்சல் முகாம் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. தினந்தோறும் 100 முகாம்கள் வீதம் 5 ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இந்த முகாமில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மட்டும் இன்றி அனைத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க