• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் துவங்கியது சிறப்பு கொரோனா காய்ச்சல் பரிசோதனை முகாம்

July 9, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் சிறப்பு கொரோனா காய்ச்சல் பரிசோதனை முகாம் தொடங்கி உள்ளது. அதில் ஏராளமானோர் மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர்.

கோவை மாநகரில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. சுமார் 20 லட்சம் பேர் இங்கு வசித்து வரும் நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இது வரை 927 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர். 308 பேர் குணம் அடைந்து உள்ளன. 3 பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் 100 வார்டுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா காய்ச்சல் முகாம் இன்று முதல் தொடங்கபட்டுள்ளது. தினந்தோறும் 100 முகாம்கள் வீதம் 5 ஆயிரம் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இன்று காலை தொடங்கிய இந்த முகாமில் சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் மட்டும் இன்றி அனைத்து பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க