March 6, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு போர் பட்டாலியன் பிரிவு சார்பில் நடைபெற்ற என்.சி.சி மாணவியருக்கான ‘பி’ பிரிவு தேர்வில் மாணவிகள் துப்பாக்கி பயிற்சி தேர்வில் ஈடுபட்டனர்.
தேசிய மாணவர் படை மாணவியருக்கான ‘பி’ சான்றிதழ் தேர்வு கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெறும் தேர்வில் நீலகிரி ,திருப்பூர் கோவை உள்ளிட்ட 3மாவட்டங்களில் இருந்து பங்கேற்றனர். தமிழ்நாடு பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படையில் உள்ள கல்லூரி அளவிலான மாணவர்களுக்கான தேர்வை கமாண்டர் அதிகாரி கர்னல் ஜே பி எஸ் சௌகான் துவக்கி வைத்தார்.
இதில் அணி நடைப்பயிற்சி, தேசிய மாணவர் படை அமைப்பு, வரைபடம் பயிற்சி,தூரங்களை கணக்கிடுதல் ,தரைப்படை பயிற்சி, துப்பாக்கி சுடுதல் குறித்த கையாளுதல் மற்றும் தற்காப்பு கலை உள்ளிட்டவைகள் தேர்வு மாணவியருக்கு நடத்தப்பட்டன. மொத்தம்,653 என்.சி.சி., மாணவியர் தேர்வில் பங்கேற்றனர்
இதில் இந்திய ராணுவம் மற்றும் இந்திய கடற்படை என தனி தனியாக தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வின் போது இளம் மாணவியர்கள் துப்பாக்கிகளை கொண்டு கையாளுதல் பயிற்சி பெற்றது பார்வையாளர்களை வியக்க வைத்தது.
இது குறித்து என்.சி. சி அலுவலர் கல்பனா கூறுகையில்,
இந்திய ராணுவத்திற்கும், பெண்கள் வருவது மிகவும் முக்கியம் என்று மேலும் இந்த என்.சி.சி மூலம் தங்களை பாதுகாத்து கொள்வதுடன் இந்திய நாட்டை ,ராணுவத்தினரும், கடற்படையினரையும் காப்பாற்றுவத்தில் பெருமை கொள்வதாக தெரிவித்தார்.