• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ் கைது

May 12, 2020 தண்டோரா குழு

கோவையில் மதம்மாறி காதல் திருமணம் செய்தஜோடியை மிரட்டி தாக்கியதாக கோவை திமுகவை இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை அப்பாசை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை கோட்டை மேட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர்,கோவை வடவள்ளியை சேர்ந்த தன்னுடன் படித்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த பெண்ணை நீண்ட காலமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த வாரத்தில் இருவரும் யாருக்கும் தெரியாமல் தனது நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் தங்களுடைய உறவுகாரபெண் காணமல் போனது பற்றி விசாரித்துக்கொண்டு இருந்த கோட்டை அப்பாஸ், சந்தேகத்தின் பேரில் இளைஞரின் வீட்டின் அருகில் நின்றுகொண்டு இருந்த இருவரிடம் விசாரித்ததில், காணாமல் போன உறவுக்காரபெண் மதம்மாறி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இவர்களுக்குள் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து.பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை உக்கடம் போலீசார் கோட்டை அப்பாஸை கைது செய்துள்ளனர்.தகவல் அறிந்து சிங்காநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் காவல் நிலையத்திற்கு வந்து விசாரித்து சென்றார். இதனையடுத்து திமுகவை சேர்ந்தவர்கள் உக்கடம் காவல் நிலையம் முன்பு திமுகவினர் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க