• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச் சிகிச்சை முகாம்

November 17, 2017 தண்டோரா குழு

கோவையில் திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாம் இன்று(நவ 17) நடைபெறுகிறது.

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமூக நலத்துறை, மாவட்ட முன்னோடிகள் வங்கி ஆகியவை இணைந்து திருநங்கையர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் மருத்துவச்சிகிச்சை முகாமை நடத்துகின்றனர்.இந்நிகழ்ச்சி கோவை இராமலிங்கம்காலனி திருமணமண்டபத்தில் இன்று(நவ 17)
நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கையர்களின் வாழ்வை வளமூட்டும் வகையிலும், சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பங்கேற்றவும்,சுயசார்பு அடையும் வகையிலும் பல்வேறு திட்டங்களை கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும்,திருநங்கையர்களின் திறன்களை அறிந்து அதற்கேற்றவாறு இலவச பயிற்சி அளிக்கப்படுவதுடன். பயிற்சிக்குபின் மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் கடனுதவி பெற வழிகாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்டதைச் சேர்ந்த திருநங்கையர்கள் கலந்து கொண்டு தங்களது திறன்களை மெருகேற்றி கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க