• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

March 28, 2019 தண்டோரா குழு

சமூக வளைதளங்களில் சட்டமன்ற துணைசபாநாயகர் , பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையிலான புகைப்படங்களை சமூக வளைதளங்களில் பரப்பி வரும் திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி அதிமுகவினர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்து உள்ளனர்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் என்று தவறுதலாக வேறு ஒரு நபரை குறிப்பிட்டு , பல பெண்களுடன் அவர் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வளைதளங்களில் பரப்பி வரும் , தருமபுரியை சேர்ந்த திமுக பிரமுகர் தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி , அதிமுகவை சேர்ந்த 52 ஆவது வட்ட கழக துணை செயலாளர் சீனிவாசன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளார். தேர்தல் நேரத்தில் அதிமுக மீது கலங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வளைதளங்களில் பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து உள்ளார். தவறான தகவல்களை பரப்புவதன் மூலம் அரசியல் ரீதியாக ஆதாயம் தேட திமுக முயல்வதாக புகார் தெரிவித்தார்.

மேலும் படிக்க