கோவை மாவட்டம் போத்தனூர் பகுதி சங்கம் வீதியில் நேற்றிரவு இந்து முன்னணி உக்கடம் நகர துணைத்தலைவர் ராமகிருஷ்ணன் என்பவர் மர்ம நபர்கள் சிலரால் தாக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் ராமகிருஷ்ணனை கோவை அரசு மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார்.
இது குறித்து பேசிய வானதி சீனிவாசன்,
நேற்று நடந்த சம்பவத்தை போலவே சில நாட்களுக்கு முன் பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று நடந்த தாக்குதலுக்கு இதுவரை யாரையும் காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும். தேர்தலுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டவர் மீது தாக்குதல் நடத்துவது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது என்றும் இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை தடுப்பதற்கு உடனடியாக காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு